WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Monday, December 18, 2017

Memorial Poem: Panchadsaram Vijayendran, INUVIL West;JAFFNA & BORGEN, ASKER,NORWAY BY SHAN NALLIAH,POET,NORWAY

கண்ணீர் அஞ்சலி : அமரர் பஞ்சாட்சரம் விஜயேந்திரன் பிறப்பு: 23-05 -1962 இணுவில் மேற்கு,யாழ்ப்பாணம், இலங்கை மறைவு: 15 -12 -2017 போர்கன்,அஸ்கர், நோர்வே -------------------------------------------------------------------------------------------- நிமிர்ந்த பெருநடை! நேர்கொண்ட பார்வை! யாருக்கும் அஞ்சா துணிவு! நெஞ்சில் அன்பும்,இரக்கமும்,மதிப்பும் காட்டும் நல்லதோர் நண்பனாய்! அமிர்தமான பேச்சும்!நகைச்சுவைப் பண்பும் இன்சொல்லும் வரவேற்பும் உன்ஊரின் பண்பல்லவா!உன் தந்தையின் சிரித்தமுகம், தாயின் பண்பும் எமையெல்லாம் மகிழ்விக்கும்!அவர்களை நினைவூட்டும்!நற்பண்படா! இயல்,இசை,நாடகம்,பக்தி,பஜனை,கல்வி,கேள்வி என பெருமையடா ! இமைபோலகாத்திடும் பெற்றோரும்!உற்றாரும், கற்றாரும் கூடிவாழும் எம்இணுவைபதியினிலே! செகராசசேகரவிநாயகர் பெரும் அருளன்றோ! நோர்வேநாட்டில் குடிபெயர்ந்து, மனைவி பிள்ளைகள் நலனும் காத்து நோர்வே பாசை கற்றறிந்து தொழிலில் வல்லுனனாகி வெற்றி பெற்று! பார்போற்றும்தமிழனாய் ஊர்போற்றும்தந்தையாய் பணிசெய்து மகிழ்ந்து பல்கலைகள், தொழில்நுட்பம் பிள்ளைகட்கும் கற்பித்து மனமகிழ்ந்தே யார்க்கும் அஞ்சா நெஞ்சினனாய் பலநாடுகள் சென்றுவந்து பூரித்தாய்! யாதும்ஊரே!யாவரும்கேளிர்!எனும்நோக்கில் நண்பர்கள் பலர் பெற்றாய்! பார்க்கும் போதெல்லாம் பரிவுடன் நலம் கேட்டாய்! நட்பு பேணிடுவாய்! வா நண்பா!தேநீர் குடி!உணவு அருந்து! என பாசமுடன் கேட்பாயே! எப்படி மறப்போம் உம்மை! உன் புகழ் நீடு வாழி! நீடு வாழி! எம் கண்ணீர் அஞ்சலிகள்! அன்பு நண்பன் : நல்லையா சண்முகப்பிரபு ,நோர்வே Tel:0047 -91784271 https://www.facebook.com/shan.nalliah

No comments: